(எம்.எப்.எம்.பஸீர்)
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், வெறும் தொலைபேசி தொடர்புகளை மையபப்டுத்திய விடயங்களுக்காக மட்டுமோ அல்லது, அவரது சட்டத்தரணி தொழில் ரீதியிலான தொடர்புகளுக்காகவோ கைது செய்யப்படவில்லை எனவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த உறுதியான நியாமான ஆதாரங்களின் கீழான சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் விஷேட செய்தியாளர் சந்திப்பொன்றினை நடாத்தியே அவர் இதனைத் தெரிவித்தார்.
சமூகவலைத் தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் சட்டத்தரணி ஹிஜாஸின் கைது குறித்தும் ஏனைய சந்தேக நபர்கள் சிலரின் கைது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை நிராகரிப்பதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய கூறியதாவது,
'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அண்மையில் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத் தளங்களில் பரிய எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெறுமனே தொலைபேசி அழைப்புகளுக்காக கைதுசெய்யப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. மேலும், கைதில் உள்ளடங்கும் சட்டத்தரணியை, அவர் தனது சேவையாளர் தொடர்பில் வழக்குகளில் ஆஜரானமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்படுகின்றன. இந்த விமர்சனங்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எவரையும் வெறுமனே, ஒரு தொலைபேசி அழைப்பு இருந்தது என்பதற்காகவோ, அல்லது தனது சேவை பெறுநர் தொடர்பில் தொழில் ரீதியாக முன்னிலையானமை தொடர்பிலோ கைது செய்யப்படவில்லை.
மிகத் தெளிவான ஆதாரங்களின் கீழேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டுதாரிகளுடன் இணைந்து, அமைப்புக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் எமது விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
வெறுமனே தொலைபேசி அழைப்புக்களை மட்டும் நாம் பார்க்கவில்லை. தொலைபேசி அழைப்புக்களுக்கு மேலதிகமாக, அவர்கள் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவை அறிவியல் தடயங்கள் ஊடாக கண்டறியப்பட்டு, நியாயமான சந்தேகத்தின் பேரிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன ' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM