ஐ.பி.எல். போட்டிகள் நடக்காததால் மஹேந்திர சிங் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது இலகுவான விடயமாக இருக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் அஸாருடீன் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணிக்கு தெரிவு செய்யப்படுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநரான ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.
ஐ.பி.எல். போட்டிகளும் நடக்காததால் 38 வயதான டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில் டோனி விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் அசாருதீன் தெரிவித்துள்ளதாவது,
‘டோனி அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதை என்னை விடவும், அவரே கூறவதுதான் சிறந்ததாக இருக்கும். இது அவருடைய சொந்த விருப்பம். கொரோனா வைரஸ் பரவலால் இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியாக இல்லை. அதனால் ஐ.பி.எல். போட்டிகளும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இத்தகைய பிரச்சினை எல்லாம் சரிவருவதற்கு சற்று நாட்கள் எடுக்கும். அதே நேரத்தில் தோனியை பொறுத்தவரை இது அவருடைய தனிப்பட்ட முடிவு தான். அவர் இந்திய அணிக்கு திரும்புவது இலகுவான விடயமல்ல.
அப்படியே வாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், தெரிவாளர்கள் நிச்சயம் அவரது திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். ஏனெனில் அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருந்து வருகிறார். பயிற்சி பெறும் விதமாக போட்டிகளில் விளையாடுவது (உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போன்றவை) உண்மையிலேயே மிகவும் முக்கியம். ஒருவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து ஓரளவு கிரிக்கெட் விளையாட வேண்டும். பயிற்சி மேற்கொள்வது என்பது வேறு, களத்தில் இறங்கி போட்டிகளில் விளையாடி அதன் மூலம் பயிற்சி எடுப்பது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM