Huawei இன் பிரதான முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியான P9 சந்தையில் அறிமுகமாகவுள்ளமை தொடர்பில் அறிவிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில், இலங்கையில் அறிமுகமாகவுள்ள மிகவும் தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட Huawei ஸ்மார்ட்போனாக இது அமையும் என ஊகங்கள் கிளம்பியுள்ளன.
இலங்கையில் அறிமுகமாகவுள்ள Huawei P9 ஸ்மார்ட்போன் சந்தையில் ரூபா 75,000 - ரூபா 80,000 வரையான விலைக்குள் கிடைக்கும் எனவும் ஊகிக்கப்படுகின்றது. அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இச்சாதனம், உயர் மட்ட ஸ்மார்ட்போன் சந்தையை இலக்காகக் கொண்டிருக்கும்.
உள்நாட்டிலுள்ள நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், Huawei நிறுவனம், தனது பிரத்தியேக தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து இச்சாதனத்தின் விற்பனையை தீவிரமாக முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது. “இச்சாதனம் பொன், வெள்ளி மற்றும் கறுப்பு நிறங்களில் நாட்டில் கிடைக்கப் பெறவுள்ளது”.
Huawei மற்றும் Leica ஆகிய இரு நிறுவனங்களின் வடிவமைப்பு நன்மதிப்பு மற்றும் பொறியியல் மேன்மை ஆகிய சிறப்புக்களை ஒன்றாக இணைத்து, இரு நிறுவனங்களாலும் இணை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் புகைப்படவியல் சாதனமான P9, மிகச் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள், பார்வை வில்லைகள், சென்சார்கள், பட செயலாக்க வழிமுறைகள் ஆகிய சிறப்பம்சங்களுடன் பாவனையாளர்கள் அதியுயர் தரம் கொண்ட படங்களை தம்வசப்படுத்துவதற்கு அவர்களுக்கு வலுவூட்டுகின்றது.
விவரமாகவும், துல்லியமாகவும் படம் பிடிப்பதில் சம்பாதித்துள்ள நற்பெயர், தொழிற்துறையில் மிகவும் கடுமையான தரச் சோதனை தேவைப்பாடுகளுக்கு இணங்கும் சிறப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள Leica இன் பார்வை வில்லைகளின் வலுவை முற்றிலுமாக வெளிக்கொணருகின்ற இரட்டை கமரா வடிவமைப்பே P9 கொண்டுள்ள அதிசிறந்த படவாக்க திறன்களுக்கான பிரதான காரணமாகும். P9 இலுள்ள RGB கமராவானது வர்ண வேறுபாட்டை துல்லியமாக வசப்படுத்துவதுடன் ஒரே வண்ணமுடைய கமரா (monochrome) துல்லியமாக படம் பிடிப்பதற்கு மிகச் சிறந்தது.
P9 கொண்டுள்ள இரு பின்புற கமராக்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படுவதுடன் பாவனையாளர்கள் படங்களை அதிசிறந்த துல்லியம், தெளிவான வர்ண வேறுபாடுகளுடன் வசப்படுத்த இடமளிக்கின்றன. இரட்டை கமரா வடிவமைப்பானது அதிக ஒளி மற்றும் துல்லியத்துடன் படத்தை எடுப்பதற்கு உத்தரவாதமளிப்பதால் போதிய ஒளி இல்லாத நிலைமைகளிலும் P9 உண்மையில் மிகச் சிறப்பாக தொழிற்படுகின்றது.
இந்த ஆண்டு ஏப்ரலில் லண்டன் மாநகரில் இடம்பெற்ற முன்னோடி நிகழ்வொன்றில் Huawei நிறுவனத்தின் நுகர்வோர் வர்த்தகப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான றிச்சர்ட் யு Huawei P9 ஸ்மார்ட்போன் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.
1000 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் Huawei P9 இன் சர்வதேச உற்பத்தி விளம்பர தூதுவர்களான ஹென்றி ஹெவில் மற்றும் ஸ்கார்லட் ஜஹான்சன் ஆகியோர் தோன்றும் தொலைக்காட்சி விளம்பர முன்னோட்டம் காண்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM