(ஆர்.யசி)
கொரோனா வைரஸ் சவால்களுக்கு மத்தியில் நாளை தளர்கப்படும் ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் கொரோனா வைரஸ் சவால்களை வெற்றிகொள்ள மக்கள் தமது கடமை பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.
அவரது டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தொற்றுநோயை இல்லாதொழிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரச தனியார் துறைகளின் வருவாயை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதன் காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை தளர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது நாட்டு மக்கள் அனைவரதும் கடமையாகும்.
சுகாதார அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தப்படும் காரணிகள் மற்றும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகளை முறையாக பின்பற்றி எமக்குள்ள சவால்களை வெற்றிகொள்ள அனைவரதும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM