கொரோனா வைரஸ்க்கு எதிரான சமூக தொலைதூர விதிகளை தளர்த்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரிந்துரைக்கு அமைய “கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று (Antibody) சோதனைகள் காட்டுகின்றன” என்பதற்கு 'எந்த ஆதாரமும் இல்லை' என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
பிறபொருளெதிரி (Antibody) இரத்த பரிசோதனைகள் மூலம் நேயாளியின் கொரோனா வைரஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அறிய முடியும் என்று நாடுகளின் அரசாங்கங்கள் நம்புகின்றன.
வைரஸால் குணமடைந்தவர்கள் அல்லது பாதிப்புள்ளாகாதவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என உறுதிசெய்யப்பட்டால், அது முடக்குதலில் உள்ள நாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும்.
எனினும் இந்த செரோலாஜிக்கல் சோதனைகள் கொவிட் 19 தொற்றிலிருந்து தப்பிப்பிழைத்தவரின் நோய் எதிர்ப்பு சக்தியை நிரூபிக்கவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கிறது
இதேவேளை இப் பரி சோதனைகள் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை மட்டுமே வெளிப்படுத்துகின்றன என்று உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில், இதுவரை 738,792 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியும் 39,014 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் டிரம்ப் கடந்த வியாழக்கிழமை சமூக தொலைதூர நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் வாழ்க்கை - மற்றும் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு இட்டுச்செல்ல, மாநிலங்கள் சோதனைகளின் பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்க வேண்டும், என பரிந்துரைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM