இலங்கையில் இன்று 19 ஆம் திகதி காலை 7 மணிவரையிலான நிலவரப்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இவ்வ அதிகரிப்பு 254 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட 6 பேரும் வெலிசறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 18 ஆம் திகதி இரவு 8 மணிவரை 248 ஆக காணப்பட்டது. இதையடுத்து இரவு 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் 254 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 161 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 103 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 86 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM