பிரிட்டனின் எலிசபெத் மகாராணி தனது 94வது பிறந்தநாள் கொண்டாட்டங்களை இரத்துசெய்துள்ளார். நாடு மோசமான கொரோனா வைரசின் பிடியில் சிக்கியுள்ள தருணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவசியம் இல்லை என கருதியே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
எலிசபெத் மகாராணியின் பிறந்தநாள் விசேடமாக கொண்டாடப்படாது,வழமையான மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படல் இம்முறை காணப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசகுடும்பத்தினரின் பிறந்தநாட்கள் உட்பட விசேட தினங்களை குறிப்பதற்காக பிரிட்டனின் பல பகுதிகளில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படுவது வழமை.எனினும் இம்முறை இதற்கான விசேட ஏற்பாடுகள் தேவையில்லை எனவும் இந்த தருணத்தில் அவ்வாறான ஏற்பாடுகள் பொருத்தமற்றவை எனவும் மகாராணி கருதுகின்றார் என அரண்மணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
68 வருட ஆட்சியில் எலிசபெத் மகாராணி இவ்வாறான வேண்டுகோளை விடுத்துள்ளமை இதுவே முதல் தடவை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்கள் மகாராணியின் பிறந்தநாளை கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக எவ்விதத்திலும் விசேடமாக கொண்டாடப்போவதில்லை, என ஐடிவியின் செய்தியாளர் கிறிஸ் சிப் தெரிவித்துள்ளார்.
மகாராணியின் வேண்டுகோளை அவர் தனது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM