ஹப்புத்தளை பகுதியின் இரு பெருந்தோட்ட பகுதிகளின், குடியிருப்புகளுக்குள் சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையங்களை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன் இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந் சுற்றிவளைப்புக்களை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் 60 வயது நபர் ஒருவரும் விஹாரகலை பிரிவில் 44 வயது நபர் ஒருவருமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 200 லீற்றர் மற்றும் 400 லீற்றர் கசிப்பும், பீப்பாய்கள் உள்ளிட்ட உபகரணத் தொகுதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM