வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட நடவடிக்கை - தினேஷ் குணவர்தன

Published By: Vishnu

18 Apr, 2020 | 03:59 PM
image

(எம்.மனோசித்ரா)

உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

இது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர் கல்விக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆராய்ந்து வருகிறது. அத்தோடு பயிற்சிகளுக்காகச் சென்றவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உயர் கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப எதிர்பார்ப்பதாக கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களது விபரங்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் வெவ்வேறு நாடுகளிலுமுள்ள தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எனினும் இது வரையில் இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்படவில்லை. எனவே கொரோனா வைரஸ் பரவலின் அபாய நிலையிலிருந்து முழுமையாக மீண்ட பின்னரே ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் விமான நிலையங்களைத் திறப்பதைப் பற்றி கவனம் செலுத்த முடியும்.

எனவே நாட்டு மக்கள் அனைவரும் அதன் பாரதூரத் தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32