இந்தியாவில், ஊரடங்கு சமயத்தில் இறந்த ஆதரவற்ற பெண்ணின் உடலுக்கு, இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்த போலீஸாருக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வரும் 3ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தின் கிஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவர், உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்தார்.
குடும்பம் மற்றும் உறவினர் யாரும் இன்றி தனியே வசித்து வந்ததால், மீனாவின் உடலுக்கு, இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்வதற்கு கூட யாரும் முன்வரவில்லை.
இது குறித்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரிக்கு தகவல் தெரிந்துள்ளது.
இதையடுத்து அவர், சில பொலிஸாரை அழைத்து வந்து மீனாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போலீஸாரே மீனாவின் உடலை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் தீபக் சவுத்ரி மற்றும் போலீஸாருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM