கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு முழுமையாக மருத்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளி ஒருவருடம் வரை கடைப்பிடிக்க வுண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானொலி ஒன்றுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அளித்த நேர்காணலில் கூறும்போது,
“ சமூக விலகலை கடைப்பிடிக்கும் எதிர்காலத்திற்கு நாம் பழக வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுப்பிடிக்கும் வரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு ஒருவருடம் கூட ஆகலாம். ஆனால் அதனை பற்றி நான் இப்போது ஊகிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட அந்நாட்டு அரசு புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப கண்காணிப்பு செயலியை உருவாக்கி வருகிறது.
"மக்கள் இந்த பயன்பாட்டை எடுத்துக் கொண்டால், யாராவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகினால், அவர்களினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை மிக விரைவாகக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இப்போது, நாங்கள் அதைச் செய்ய முடியாவிட்டால், எங்களுக்கு அந்த திறன் இல்லையென்றால், பின்னர் நாங்கள் கட்டுப்பாடுகளை நீண்டகாலம் வைத்திருக்க வேண்டும், " என்று மேலும் தெரிவித்தார்.
இதுவரை அவுஸ்திரேலியாவில் 6,522 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 66 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM