(நா.தனுஜா)
அரசியல் தேவைகளுக்கு அமைவாக மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தற்போதைய நெருக்கடி நிலையில், போதிய வசதிகளற்றோரோருக்கு அவசியமான நிவாரணப்பொருட்கள் வழங்கப்படுவது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.
எனினும் மக்களின் வரிப்பணத்தில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதை அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்காகப் பயன்படுத்துவது ஏற்கப்பட முடியாததாகும். சில இடங்களில் அரசியல் தேவைகளுக்கு அமைவாகப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடியில் எவ்வித பக்கச்சார்புமின்றி தீர்வுகள் வழங்கப்படுவது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM