சுவீடன் இளவரசி சோபியா கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை நாட்டில் கட்டுப்படுத்த போராடுவதற்கு உதவுவதற்காக வைத்தியசாலையில் மருத்துவ பணியாளராக பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
சுவீடன் இளவரசர் 40 வயதுடைய கார்ல் பிலிப்பை 2015 ஆம் ஆண்டு மணந்த 35 வயதுடைய இளவரசி சோபியா, ஸ்டொக்ஹோமில் உள்ள சோபியாஹெமெட் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்று நாள் மருத்துவப் பயிற்சியை எடுத்துள்ளார்.
இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றுநோயை சுவீடனில் கட்டுப்படுத்த வைத்தியசாலையில் சுகாதாரப் பணிகளுக்கு உதவிபுரிகிறார்.
குறித்த பல்கலைக்கழகம் அந்நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் பாரமான சுமையை குறைக்க வாரத்திற்கு 80 பேருக்கு பயிற்சி அளித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுவீடனில் நேற்று மட்டும் 170 புதிய கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளது.
இதேவேளை, சுவீடனில் கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 12,540 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், 1,333 பேர் உயிரிழந்துள்ளதுடன், 550 பேர் குணமடைந்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM