தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்கள் மீதான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.
இதவேளை கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் காணொளி பதிவு 16 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
அந்த பதிவில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாவது,
“கடந்த சில நாட்களில் , ஜாஎல - சீதுவெல்ல பகுதிகளில் பல கொவிட்-19 தொற்றுக்குள்ளான நபர்கள் இனங்காணப்பட்டனர்.
அவ்வாறு தொற்றுக்குள்ளான கிரேண்ட்பாஸ், நாகலகம் வீதியில் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 118 நபர்கள் சாம்பூர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். இப்பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக நாகலகம் வீதி பகுதி 16 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
பனிச்சங்கேணி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட 20 நபர்கள் பி.சி.ஆர். பரிசோதனையின் பின்னர் நேற்று தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
தற்பொழுது, முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 1631 நபர்கள் தனிமைப்படுத்தல்களில் உள்ளதுடன், முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 3721 நபர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
80 பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன, அதில் எவருக்குமே நோய் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு பின்னர் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக, வைத்தியர்கள் மற்றும் தாதி குழாம் வைக்காலில் உள்ள டொல்பின் ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் தொடர்ந்தும் உள்ளனர். அங்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்த மற்றுமொறு குழுவினர் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM