வைரசினை கண்டுபிடித்து அதனை எதிர்கொள்வதற்கான திறன் அமெரிக்காவை விட தனக்கு அதிகம் என சீனா காண்பிக்க நினைத்ததன் விளைவே வுகானின் ஆய்வு கூடத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டமைக்கான காரணம் என பல தரப்புகள் தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வுகான் ஆய்வுகூடத்தில் உயிரியல் ஆயுதம் எதுவும் தயாரிக்கப்படவில்லை என அந்த தரப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஆவணங்களையும் பார்வையிட்ட தரப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
வெளவாலில் இருந்து மனிதர்களிற்கு வைரஸ் பரவுவது குறித்து இடம்பெற்ற ஆரம்பகட்ட ஆராய்ச்சியே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள பல தரப்பினர் முதல் நோயாளி அந்த ஆய்வு கூடத்தில் பணியாற்றினார் அவர் பின்னர் வுகானில் மக்கள் மத்தியில் சென்றார் என குறிப்பிட்டுள்ளனர் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
இரகசிய மற்றும் பகிரங்கமான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம் இதுதான் நடந்துள்ளது என்பது குறித்த உறுதியான நம்பிக்கை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள பொக்ஸ் நியுஸ் எனினும் அது உறுதியான விடயமல்ல அவ்வாறு கருதக்கூடாது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த தகவல் குறித்து டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த சிலரும் தொற்றுநோய் குறித்த நிபுணர்களும் சந்தேகம் கொண்டுள்ளனர் இது குறித்த விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
எனினும் கொவிட் 19 குறித்து சீனா அரசாங்கம் தகவல்களை பெருமளவிற்கு மூடி மறைத்தது என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களும் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்தவர்களும் ஆரம்ப கட்டத்தில் நிலைமை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களாக ஆவணங்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள பொக்ஸ் நியுஸ் ஆரம்பத்தில் வுகான் சந்தையே காரணம் என தெரிவிக்கப்பட்டது,ஆய்வுகூடத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பபுவதற்காக வுகான் சந்தை குறித்து தகவல் வெளியிடப்பட்டது என சில தரப்பினர் கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM