ஜப்பானில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவுவதற்காக தாய்வான் 2 மில்லியன் முகக் கவசங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அது மாத்திரமன்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட கொரோனாவினால் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்காகவும் தாய்வான் 16 மில்லியன் முகக் கவசங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கான தாய்வானின் இந்த உதவியின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு வலுப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நாடுகளைப் போலவே ஜப்பானும் தாய்வானுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இருவருக்கும் நெருக்கமான அதிகாரப்பூர்வமற்ற உறவுகள் உள்ளன. 1895 - 1945 க்கு இடையிலான காலப் பகுதியில் ஜப்பானின் காலனிதித்துவத்தின் கீழ் தாய்வான் இருந்தது.
அண்மைய நாட்களில் ஜப்பானில் குறிப்பாக டோக்கியோவில் கொரோனா தொற்று வீதம் அதிகரித்து வருவதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான இந்த உதவியை வழங்க தாய்வான் முன் வந்துள்ளது.
கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கொண்டவர்களை மட்டுமே பரிசோதனைக்குட்படுத்தும் ஜப்பானால் இதுவரை 8,626 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 178 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM