(எம்.மனோசித்ரா)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்களைப் போன்று தம்மைக் காண்பித்து பொலிஸாரிடம் சிலர் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே இவ்வாறான நபர்கள் தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ள 1996 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வியடம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
சில தவறான நபர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகத்தர்களைப் போன்று பொலிஸாரிடம் தம்மைக் காண்பித்து மோசடி செய்துள்ளனர். இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்வாறானவர்கள் உத்தியோகபூர்வ சின்னத்துடன் அடையாள அட்டைகளையும் வைத்திருக்கின்றனர். இதையொத்த சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளதுடன் அவை உரிய அதிகார அமைப்புகளுக்கு புலனாய்விற்காக தெரியப்படுத்தப்பட்டுள்ளன.
எவரேனும் உத்தியோகத்தருக்கு அல்லது பொது மக்களில் ஒருவருக்கு இவ்வாறான நபர்கள் என்று சந்தேகம் ஏற்பட்டால் அது பற்றி 1996 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு அறிவிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM