கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரை நடத்த தயாராகவிருப்பதாக இலங்கை கிரிக்கெட், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளது.
மே மாதம் 03 ஆம் திகதி வரையான இந்தியாவின் நாடு தழுவிய பூட்டல் நடவடிக்கை காரணமாக மறு அறிவிப்பு வரை பி.சி.சி.ஐ. ஐ.பி.எல் தொடரை ஒத்திவைத்தது.
இந் நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ஷம்மி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதொடர்பான செய்தியொன்று சிங்கள ஊடகத்தில் வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அத்துடன் அடுத்த சில நாட்களில் இலங்கையில் கொவிட் 19 அச்சுறுத்தல் குறைந்தால் இலங்கையின் இந்த முன்மொழிவு தொடர்பில் இந்தியா ஆராயும் என்றும் அவர் குறித்த சிங்கள பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கூறிய அவர்,
ஐ.பி.எல். நிறுத்தப்பட்டால், இந்திய கிரிக்கெட் நிறுவனம் மற்றும் ஐ.பி.எல். பங்குதாரர்கள் 500 மில்லியனுக்கும் அதிகமான இழப்பைச் சந்திக்க நேரிடும்.
எனவே, 2009 இல் தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் செய்ததைப் போல் பிரிதொரு நாட்டில் லீக் தொடரை நடத்துவது அவர்களுக்கு நன்மை பயக்கும் ”.
இது தொடர்பில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முன்னேற்றகரமான பதிலினை அளித்தால் இலங்கை சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM