சுவாச கோளாறு காரணமாக திடீரென்று ஏற்படும் மூச்சுத்திணறல் தொடர்பான acute respiratory distress syndrome என்ற பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிவதற்காக தற்பொழுது ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப் என்ற கருவி கண்டறியப்பட்டிருக்கிறது.
சுவாசப் பாதையில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளால் மூச்சுத் திணறல், இதய பாதிப்பு, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக சிலருக்கு இதயத்துடிப்பு சீரற்றதாக இருக்கும். தற்போதுள்ள நடைமுறையில் இத்தகைய நோயாளிகளை மருத்துவர்கள் தங்களிடமுள்ள ஸ்டெதாஸ்கோப்பினால் தான் இதய துடிப்பை கண்டறிவார்கள். ஆனால் தற்போது கண்டறியப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட் ஸ்டெதாஸ்கோப்பால் நோயாளி தொலைவில் இருந்தாலும் இத்தகைய பாதிப்பை கண்டறிய இயலும்.
அதே தருணத்தில் நோயாளி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்தாலும் மருத்துவர்கள் அவர்களை தொலைவிலிருந்தே பரிசோதிக்கவும் முடியும்.
நோயாளிகளின் இதயத்துடிப்பு சத்தம் வயர்லெஸ் முறையில் மருத்துவர்களுக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவர்கள் நோயாளிகளுக்கருகே செல்ல வேண்டிய அவசியம் உருவாகாது. இந்த சாதனம் மூலம் நோயாளியின் மருத்துவ குறிப்பு சேகரிக்கப்படுகிறது. மேலும் இதனை மற்ற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இந்தக் கருவியை மும்பையில் உள்ள இந்திய ஐஐடி தொழில்நுட்ப குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM