சட்டவிரோத முறையில் பிரிவினவாத சக்திகளின் தேவைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்ற எதிர்ப்பார்க்கும் புதிய அரசியலமைப்பினை ஸ்தாபிக்க முன்னர், அதற்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் சூழ்ச்சிகரமான சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ஸ குற்றம் சாட்டினார்.
மூவின மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வரும் அரசாங்கமானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தக்கவைத்து அதன் ஊடாக தனக்கு ஏற்றவறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மறைமுகமாக சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிகாட்டினார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய விமல் விரவன்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM