பாகிஸ்தானில் இலங்கை அணி மீதான தாக்குதல்: 3 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Published By: Ponmalar

23 Jun, 2016 | 12:41 PM
image

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009 ஆண்டு தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (22) குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஏனைய மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை விசாரணை தொடர்பான அரச தரப்பு சாட்சியங்களை எதிர்வரும் ஜுலை 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொஸின் ரஷிட் மற்றும் அப்துல் ரஹ்மான் என்ற இருவரை குற்றவாளிகள் என பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இலங்கை அணி வீரர்கள் காயமடைந்ததுடன், பாதுகாப்பில் ஈடுபட்ட 6 பொலிஸார் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49