அமெரிக்காவின் போர்க்கப்பலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மாலுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குவாம் மருத்துவமனையின் தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாலுமியே உயிரிழந்துள்ளார்.
தியோர்டர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பலின் மாலுமியே உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க போர்க்கப்பலின் கடற்படை வீரர்கள் 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 30 ம் திகதி குறிப்பிட்ட மாலுமி வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து வேறு நான்கு கடற்படை வீரர்களுடன் அவர் குவாமில் தனிமைப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
9 ம் திகதி மருத்துவபரிசோதனையின் போது ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்க அதிகாரியொருவர் வெளிநாடுகளில் நெருக்கமான சூழலில் பணியாற்றும்; கடற்படையினர் வைரசினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகமாக காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.
எனினும்இதுவரையில் யுஎஸ்எஸ் ரூஸ்வெல்ட் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM