(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில், சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பிரசாரம் செய்த 16 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
பண்டாரகம, கண்டி, தெஹிவளை, மஹரகம, நுகேகொடை, காலி, வாதுவ, அங்கொடை, பொல்கஹவெல, பெலிகல, கட்டுகஸ்தோட்டை, வெலிமடை, கடவத்தை, ராகம, நொச்சியாகம பகுதிகளைச் சேர்ந்த 16 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இந்த 16 பேரில் 7 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் ஆலோசனையின் கீழ், அந்த திணைக்களத்தின் இணைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை , பெலிகல பகுதிகளில் இருவரை கைது செய்தனர்.
அவர்களிருவரும் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இதனையடுத்து அக்குழுவினர், கடந்த 11 ஆம் திகதி வெலிமடை, கடவத்தை மற்றும் ராகமை ஆகிய பகுதிகளில் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்து 4 சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதியாக நொச்சியாகம பகுதியில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை கைதுசெய்யப்பட்ட 16 பேரில் ஒரு பெண் உள்ளடங்குவதுடன் ஏனையோர் ஆண்களாவர். இதில் உள்ளடங்கும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் சமூக வலைத் தளங்களில் கொரோனா தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டாலோ அல்லது அவ்வாறான தகவல்களை பகிர்ந்தாலோ அவர்கள் கைதுசெய்யப்படுவர் என தெரிவிக்கும் பொலிஸ் தலைமையகம் இது தொடர்பில் சி.ஐ.டி.யின் தனிப்படையும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகமும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM