(செ.தேன்மொழி)
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 24 நாட்களுக்குள் 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 6 ஆயிரத்து 426 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு,கம்பஹா,களுத்துறை,கண்டி,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்,சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவை தவிர்ந்த ஏனையபகுதிகளுக்கான ஊரடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை தளர்த்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஊரடங்குக்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பதில் பொலிஸ் மா அதிபரும் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய இன்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 1512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 354 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 24 நாட்களுக்குள் மாத்திரம் 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ,கார், முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட 6426 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அதனை வைரஸ் தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே கையளிக்கப்படும்.
இதேவேளை குறித்த வாகனங்கள் தொற்று நீக்கம் தொடர்பான போக்குவரத்து செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதேவேளை நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM