24 நாட்களுக்குள் 25 ஆயிரத்து 31 பேர் கைது !

Published By: Digital Desk 3

13 Apr, 2020 | 03:15 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 24  நாட்களுக்குள் 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 6 ஆயிரத்து 426 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிறு காலவகாசம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு,கம்பஹா,களுத்துறை,கண்டி,புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும், இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும்  மீள் அறிவிக்கும் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன்,சில பகுதிகள் முற்றகாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  இவை தவிர்ந்த ஏனையபகுதிகளுக்கான ஊரடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை தளர்த்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஊரடங்குக்கு புறம்பாக செயற்படுபவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக  பதில் பொலிஸ் மா அதிபரும் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய  இன்று திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 1512 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களிடமிருந்து 354 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கடந்துள்ள 24 நாட்களுக்குள் மாத்திரம் 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ,கார், முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட  6426 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அதனை வைரஸ்  தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னரே கையளிக்கப்படும்.

இதேவேளை குறித்த வாகனங்கள் தொற்று நீக்கம் தொடர்பான போக்குவரத்து செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதேவேளை நாடளாவிய  ரீதியில் சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33