கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த கைதிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்காதமையால் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள தற்போதைய அரசாங்கத்தால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM