பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் கிசிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் 55 வயதான பொறிஸ் ஜோன்சன் கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார்.
திடீரென மத்திய லண்டனில் உள்ள சென் தோமஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜோன்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
பின்னர் தொடர் சிகிச்சையால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
'பிரதமர் குணமடைந்து வைத்தியசாலையைில் இருந்து வெளியேறினார் என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், 'அவரது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் படி, பிரதமர் உடனடியாக பணிக்குத் திரும்ப மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM