சகல பல்கலைக்கழகங்களும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு..!

Published By: J.G.Stephan

12 Apr, 2020 | 06:03 PM
image

(ஆர்.யசி )

எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களையும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய மே மாதம் 4 ஆம் , 11 ஆம் ,18 ஆம் திகதிகள் என மூன்று கட்டமாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இது குறித்து தெளிவுபடுத்துகையில் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றுநோய்  காரணமாக  பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மூன்று கட்டங்களில் திறக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் மே மாதம் 4 ஆம் திகதி பல்கலைக்கழக கல்விசார் மற்றும் சாரா ஊழியர்களின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கவும், இதன்போது பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி அத்தியாவசிய சேவை குழுவையும் வழிநடத்தல் குழுவையும் வரவழைத்து தீர்மானம் எடுக்க இடமளிக்கப்படுகின்றது.

எதிர்வரும் மே மாதம் 11 திகதி சகல இறுதியாண்டு மாணவர்களையும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதித்து அவர்களின் இறுதி தேர்வுகளுக்கான கற்கையை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

இதன்போது வைத்திய பீடத்தின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள், விசேட மட்டும் கௌரவ பட்டப்படிப்பு நான்காம் ஆண்டு மாணவர்கள், சாதாரண பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி அழைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்  பின்னர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஏனைய சகல முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான பல்கலைக்கழக  மாணவர்கள் அவர்களின் கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.  

இதற்கு முன்னர்  சகல மாணவர்களும்,  உபவேந்தர்கள், அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் பின்பற்றக் கூடிய சுகாதார நடவடிக்கைகள்  குறித்து  சுற்றுநிருபம் வெளியிடப்படும்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல் இணைய கல்வியை பயன்படுத்தி தமது திறமைகளை வளர்க்கும் வேலைத்திட்டம் அதிகரித்துள்ளது.

ஆகவே இப்போது கல்வியை தொடர முடியாது நீண்ட காலமாக வீடுகளில் இருந்த மாணவர்களை இவ்வாறு இணைய கல்வியின் மூலமாக துரிதமாக அவர்களின் கல்வி பின்பற்றல்களை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33