பதுளையில் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த பன்னிருவர் தியத்தலாவை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்று மாலை (11.04.2020) அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் இந்தோனேசியா நாட்டிற்குச் சென்று கடந்த 28ம் திகதி நாடு திரும்பி தத்தமது சொந்த இடங்களான பதுளையில் ஹப்புவத்தை, பிங்கராவ, பதுளை ஆகிய இடங்களில் தத்தம் வீடுகளில் மறைந்திருந்தனர்.
இது குறித்து பதுளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து பகுதி பொதுச் சுகாதாரப் பிரிவினருடன் பொலிசார் இன்று குறிப்பட்ட வீட்டாரை விசாரணை செய்த போது அவர்களில் நால்வர் இந்தோனேசியா நாட்டிற்குச் சென்று நாடு திரும்பி மறைந்து வாழ்ந்தவர்களென்று தெரிய வந்துள்ளது.
அத்துடன் அவ்விசாரணையின் போது பதுளையிலிருந்து ஐந்து பேர் இந்தோனேசியா சென்று நாடு திரும்பிய போதும் நால்வர் மாத்திரமே பதுளைக்குத் திரும்பியதாகவும் மற்றொருவர் ஹொரவப்பொத்தானையில் உள்ள தமது புதல்வனின் இல்லத்திற்குச் சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஹொரவப்பொத்தானை பொலிஸாருக்கும் அப்பகுதி சுகாதாரப் பிரிவினருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
உடனடியாகச் செயற்பட்ட ஹொரவப்பொத்தானை பொலிஸார் மறைந்திருந்த குறிப்பிட்ட நபரைக் கண்டுபிடித்ததுடன் அவருடன் சேர்த்து மேலும் நால்வரை தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
பதுளையில் மூன்று இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பன்னிருவர் மாத்திரம் தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் ஹொரவப்பொத்தானையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐவரும் அப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் ஹொரவப்பொத்தானைக்குச் சென்ற நபர் பதுளை பசறை வீதி மூன்றாம் மைலைச் சேர்ந்தவராவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM