கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் போராடி வரும் நிலையில், அந் நாட்டு மருத்துவ ஊழியர்களுக்கு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த உத்தரவின்படி, நாடு அவசரகால நிலையில் இருக்கும்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவ ஊழயிர்களுக்கே இவ்வாறு வெளிநாடுகளில் சென்று பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் ஆண்டுதோறும் 13,000 மருத்துவ பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் அதேவேளை, உள்நாட்டில் 290,000 சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும் அந் நாட்டு அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் இதுவரை 4,428 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனால் 247 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo Credit : asia.nikkei
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM