கொரோனாவின் தீவிரத்தால் உலகளாவிய ரீதியில் 16 இலச்சத்து 98 ஆயிரத்து 8 நூற்று 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலச்சத்து 2 ஆயிரத்து 684 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகமான இறப்புகள் ஐரோப்பிய நாடுகளிலேயே பதிவாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கூட்டாக இதுவரை 820,109 பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 48 சதவீதமாகும். அத்துடன் 70,063 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது மொத்த இறப்பு எண்ணிக்கையின் 68 சதவீதமாகும். இதேவேளை 196,782 பேர் குணமடைந்தும் 30,232 தீவிரசிகிச்சைபிரிவிலும் உள்ளனர்.
ஐரோப்பிய நாடுகள் பட்டியலில் கொவிட்19 வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்ககின்றது.
இங்கு 158,273 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்16,081பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 55,668 பேர் குணமடைந்துள்ளனர்.
இத்தாலி ஐரோப்பிய நாடுகளில் இதுவரை அதிக உயிரிழப்புகள் பதிவான நாடாக உள்ளதுடன் நேற்றுவரை உலகளவிலும் முதலிடத்திலிருந்தது.
இத்தாலியில் இதுவரை, 147,577 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 18,849 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை 30,455 பேர் குணமடைந்துள்ளனர்.
அடுத்ததாக அதிகூடிய பாதிப்பு பிரான்ஸில் பதிவாகியுள்ளது.
இங்கு 124,869 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 13,197 பேர் உயிரிழந்தும் 24,932 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
இதேவேளை ஜேர்மனியில், 122,171 பேர் பாதிக்கப்பட்டும், 2,736 பேர் உயிரிழந்தும், 53,913 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
ஸ்பெயினுடன் ஒப்பிடும் போது ஜேர்மனியில், குணமடைந்தவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.
பிரித்தானியாவில், 73,758 பேர் கெரோனா பாதிக்கியுள்ளனர். இவர்களில் 8,958 பேர் உயிரிழந்தும், 344 பேர் குணமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் மிக குறைவான குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை கொண்ட நாடாக பிரித்தானியா விழங்குகின்றது,
பெல்ஜியத்தில் இதுவரை, 26,667 பேர் பாதிக்கப்பட்டும், 3,019 பேர் உயிரிழந்தும், 5,568 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
சுவிஸ்சர்லாந்தில் இதுவரை, 24,551 பேர் பாதிக்கப்பட்டும், 1,002 பேர் உயிரிழந்தும், 11,100 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
அத்துடன் நெதர்லாந்தில் இதுவரை, 23,097 பேர் பாதிக்கப்பட்டும், 2,511 பேர் உயிரிழந்தும், 250 குணமடைந்தும் உள்ளனர்.
இது தவிர ஐரோப்பிய நாடுகளில் போர்த்துகல், ஆஸ்திரியா, ரஷ்ய, ஸ்வீடன், அயர்லாந்து உள்ளிட்ட 40 நாடுகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM