கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் 21 நாள் தொடர் ஊடரங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவின் பிரபலங்கள் அந்நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.
இந்த வரிசையில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்து நாட்டு மக்களுக்கு சேவை வழங்கி வருகின்றார்.
இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபா வழங்கியுள்ளதுடன் ஒரு மாதத்திற்கு ஐயாயிரம் ஆயிரம் பேருக்கு உணவளிக்கும் தொண்டையும் முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவில், ஊரடங்கு உத்தரவால் தினக்கூலி வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் இலட்சக்கணக்கான மக்கள் அவதியுறுகின்றனர்.
இவர்களுக்கு லாப நோக்கமின்றி உணவுகள் வழங்கிவரும் அப்னாலயா என்ற தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் 5000 ஆயிரம் பேருக்கு ஒரு மாதம் உணவு வழங்கி வருகிறார். இதை குறித்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் அதன் டுவிட்டர் பக்கத்தில்,
‘‘லொக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் டெண்டுல்காருக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார். மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு கொடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM