பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பரவிய தீப்பரவலில் சிக்கி, தந்தையும் மகளும் பலியாகியுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தீயில் சிக்குண்டு எரிகாயத்துக்குள்ளான தாயும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கொட சந்தி - ருக்கத்தன வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பலங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீக்கிரையான வர்த்தக நிலையத்தின் ஒருபகுதியிலேயே இவர்கள் வசித்து வந்துள்ளதுடன் இதன்போதே தீபரவியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது 50 வயதுடைய தந்தையொருவரும் 19 வயதுடைய மகளும் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.
தாயும் மகனும் தீக்காயத்துக்குள்ளான நிலையில் பலங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பலங்கொடை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM