பாராளுமன்றம் அங்கீகரித்த கடன் எல்லைக்கு அப்பால் சென்று கடன்பெறவில்லையென திட்டவட்டமாகத் தெரிவித்த அரசாங்கம் கணக்கெடுப்பு முறையில் ஏற்பட்ட குளறுபடியாலேயே கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலா ளர் மாநாட்டில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர்களான அஜித் பி.பெரேரா, எரான் விக்கிரமரத்ன ஆகியோர் கூட்டாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில்,
அரச நிறுவனமொன்றில் அறிக்கையை விமர்சிக்கும் அதிகாரம் எதிர்க்கட்சிக்கு மட்டுமல்ல, அரசாங்கத்துக்கும் இருக்கிறது. அந்தவகையிலேயே கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலுள்ள விடயம் பற்றி கருத்து வெளியிடப்பட்டது.
குறிப்பாக பாராளுமன்றம் அங்கீகரிக்கும் கடன் எல்லையைத் தாண்டி உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களை பெறமுடியாது. அரசியலமைப்பின் 148ஆம் சரத்துக்கு அமையத்தான் நிதி கொடுக்கல் – வாங்கல் கள் நடைபெறவேண்டும். அது உரியமுறை யில் பின்பற்றப்பட்டுள்ளது.
எனவே, கணக்கெடுப்பு முறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே மேற்படி அறிக்கையில் கடன் எல்லை மிகைப்படுத் தப்பட்டுள்ளது. அதுதொடர்பாக நாம் சரி யான கருத்துக்களை முன்வைப்போம். அதன்பின்னர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுமென நாம் எதிர்பார்க்கிறோம் என்ற னர். தற்போதைய வரிவிதிப்பு முறைப்படி வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதமாகவும் சாதாரண மக்கள் 80 சதவீதமாகவும் வரி செலுத்துகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். இன்னும் இரண்டு வருடங்க ளில் வரி செலுத்தல் முறை கட்டாயப்படுத் தப்படும் என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM