இந்தியாவின் மும்பையில் 70 இற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 250 செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில ஐக்கிய செவிலியர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மும்பை பாட்டியா வைத்தியசாலையில் இரு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த 15 செவிலியர்கள் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதகமான சோதனையை செய்துள்ளனர்.
பாட்டியா வைத்தியசாலையிலுள்ள இரு கொரோனா தொற்றாளர்களும் முன்னர் வாங்கோட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தற்போது வங்கோட் வைத்தியசாலையில் 50 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில ஐக்கிய செவிலியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆகாஷ் பிள்ளை உறுதிப்படுத்தியுள்ளார்.
வாங்கோட் வைத்தியசாலையில் மூன்று செவிலியர்கள் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகளை வெளிப்படுத்திய நோயாளிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவருடன் தொடர்புகளை பேணியுள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அது மாத்திரமல்லாமல் குறித்த செவிலியர்கள் தங்கள் விடுதிக்கு சென்று 280 க்கும் மேற்பட்ட செவிலியர்களுடனும் வசித்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே 250 க்கும் மேற்பட்ட செவிலியர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மும்பையில் மேலும் ஒரு வைத்தியசாலையில் 10 செவிலியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் பிள்ளை கூறினார்.
இந்தியாவில் தற்போது 6,771 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 228 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதேவேளை பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்ட 203 கொரோனா தொற்று உயிரிழப்பு சம்பவங்களில் 21 பேர் வைத்திய தொழிலாளர்கள் என்று அந் நாட்டு மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஜோஸ் பி. சாண்டியாகோ தெரிவித்துள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM