உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் அரசு தோல்வியடையும்.இந்த அச்சம் காரணமாகவே தேர்தல் நடத்தப்படுவது ஒத்திவைக்கப்படுகிறது என நேற்று சபையில் தினேஷ் குணவர்த்தன எம்.பி குற்றம் சாட்டினார்.
எனினும் இந்தக் குற்றச் சாட்டை அமைச்சர் பைசர் முஸ்தபா நிராகரித்தபோது தினேஷ் எம்.பி.க்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதோடு பொது எதிர்க்கட்சி (மஹிந்த அணி) ஆதரவு எம்.பி.க்கள் கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தல் ஒன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியவியல் மற்றும் ஊடகங்களுக்கான ஒழுக்கநெறி தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம்.பி உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசு உரிய காலத்தில் நடத்தாது காலத்தை கடத்துகிறது என கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
தேர்தல்களை நடத்த அரசு அச்சமடைந்துள்ளது. தேர்தலை நடத்தினால் தோல்வி காண்போம் என்ற அச்சம் அரசுக்குள் குடிகொண்டுள்ளது எனவே அடிக்கடி ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து தேர்தலை ஒத்திப்போடுகிறது எனத் தெரிவித்தார்.
அத்துடன் முடிந்தால் தேர்தலை நடத்திக் காட்டுங்கள். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற வேண்டும். பின் கதவால் வந்தவர்களுக்கு இது புரியாது என்றும் தினேஷ் எம்.பி தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்க அமைச்சர் பைசர் முஸ்தபா எழுந்த போது தினேஷ் எம்.பி.க்கும் அமைச்சருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இவ் வாக்குவாதத்தில் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யும் பங்கேற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM