கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகநாடுகளில் மட்டுமல்லாது இலங்கையையும் பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக நாளாந்தம் உழைத்து தமது அன்றாட வாழ்க்கை நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மக்களின் உணர்வுகளை அறிந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலை கிளையும் அதன் வைத்தியர் நலன்புரி சங்கமும் இணைந்து மக்களுக்கு உதவும் நோக்கில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதன் முதல் கட்டமாக வெள்ளவத்தையில் மூவின மக்களும் செறிந்து வாழும் பகுதியில் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்கும் பணியை முன்னெடுத்திருந்தனர்.
இதன் 2 ஆம் கட்டமாக ஹொரணை பகுதியில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிவாரணப்பணிக்கான நிதி உதவிகளை சிறுவர் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், பயிற்சி காலத்தில் உள்ள வைத்தியர்கள் ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM