(எம்.மனோசித்ரா)
அத்தியாவசிய சேவைகளுக்காக அரச மற்றும் தனியார் துறைகளில் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊரடங்கு சட்டத்தின் போது அதற்கான அனுமதிபத்திரமாக பயன்படுத்தும் தொழில் அடையாள அட்டை மாத்திரமின்றி தாம் பணிபுரியும் நிறுவன பிரதானியினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் வைத்திருத்தல் அவசியமாகும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நிபந்தனை நாளை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதோடு, வைத்தியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந் நிபந்தனை பொறுந்தாது என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் அவர்களது தொழில் அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றோடு நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தையும் வைத்திருத்தல் அத்தியாவசியமாகும்.
சில நபர்கள் தமது தொழில் அடையாள அட்டைகளைப் தவறாகப் பயன்படுத்துகின்றமை இனங்காணப்பட்டுள்ளமையால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அத்தியாவசிய சேவைகளுக்காக கிடைக்கப் பெற்றுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் இம் மாதம் 30 ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும். எனினும் அதன் பின்னர் குறித்த அனுமதிபத்திரத்தை மீள புதுப்பிக்க வேண்டியது அவசியமற்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM