(எம்.மனோசித்ரா)
சீனாவின் கவனக் குறைவினால் கொரோனா வைரஸ் ஏனைய நாடுகளுக்கும் பரவியிருக்குமானால் அந்நாடுகளுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு வைரஸ் எந்த நாட்டில் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் உறுதியான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் இவ் இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்திலேயே உருவாகியது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இந்த வைரஸ் சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றி அந்நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு பரவாமல் ஏனைய நாடுகளில் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதிப்பிற்குள்ளாக்கியது எவ்வாறு என்பது பற்றி எமது சங்கம் ஆராய்ந்து வந்தது.
இந்த வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ள போதிலும் உலகின் ஏனைய நாடுகளால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வாறிருப்பினும் தற்போது அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சீனாவில் கவனக்குறைவினால் இந்த வைரஸ் ஏனைய நாடுகளிலில் பரவியிருக்குமானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு சீனா இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்விடயத்தில் சீனா தவறிழைத்திருந்தால் அந்நாட்டுக்கு எதிராக நேரடியாக நடவடிக்கை எடுப்பது எவ்வாறு என்பது பற்றி எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆராய்வுகளில் இனங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய எமது சங்கம் கீழ் வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கிறது. அந் நடவடிக்கைகளாவன,
கொரோனா வைரஸ் எந்த நாட்டில் உருவாகியது ? எவ்வாறு அந்த வைரஸ் உருவாகியது ? வைரஸ் சீனாவின் வுஹான் நகரிலிருந்து உலகின் வௌ;வேறு நாடுகளுக்கு எவ்வாறு பரவியது ? உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோருகின்றோம்.
சீனாவின் கவனக்குறைவால் இந்த வைரஸ் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பரவியிருக்குமானால் அந்நாட்டுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM