பிரித்தானியப் பிரதமர் குணம்பெற பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவிப்பு

Published By: J.G.Stephan

08 Apr, 2020 | 09:25 AM
image

கொரோனா தொற்றுறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சர்வதேச தலைவர்கள் பலர் தெரிவித்து வருகின்ற நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் விரைவில், குணம்பெற வேண்டுமென ஆசீர்வதிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பிரித்தானிய பிரதமர் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47