(நா.தனுஜா)
தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்து, ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.
இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியிருக்கிறார்.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டுமக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டிருப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது. விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் தொடரமுடியாத நிலைக்குத்தந தள்ளப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலத்தில் பாரியதொரு உணவுப்பொருள் தட்டுப்பாடொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதற்கான ஜீவனோபாய மார்க்கங்கள் அனைத்தும் முடங்கிப்போயிருக்கின்றன.
எனவே இத்தகையதொரு நெருக்கடியில் அரசாங்கம் நாட்டுமக்கள் தொடர்பில் சிந்தித்து, அவர்கள் வாழ்வதற்கான வழிவகையொன்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஒரு மனிதன் வாழ்வதற்கான அன்றாட வாழ்க்கைச்செலவு பெருமளவில் அதிகரித்திருக்கையில், சிறியதொரு தொகைப்பணத்தை வழங்கி அவர்களது தேவைகளை ஈடுசெய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனினும் தற்போதைய நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மழுங்கடித்துஇ ஏகாதிபத்தியவாதத்தை நிலைநாட்டுவதற்கா முயற்சிகள் இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. இத்தருணத்தில் அரசியல்சார் நலன்களை அடைய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதல்ல மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM