உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்போர் மீது சட்ட நடவடிக்கை - பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை

06 Apr, 2020 | 05:53 PM
image

அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்கு சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாச பயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கம்பஹா செயலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பெரும் எண்ணிக்கையிலான முறைப்படுகள் கிடைத்துள்ளன. இது குறித்து நுகர்வோர் அதிகாரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

ஊரடங்கு சட்டத்தினால் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் உள்ள சிலருக்கு தலா 5000 ரூபா வீதம் வழங்கப்படும். இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் நிதியை துரித கதியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44