பீடி கேட்டு கொடுக்காததால் தாயை கொன்ற மகன் கைது ! 

05 Apr, 2020 | 08:52 PM
image

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டை பிரதேசத்தில்,  மதுபோதையிலிருந்த நபர் ஒருவர் தமது தாயுடனான சண்டையில் தாயை கல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 31 வயதான சந்தேகநபர் சம்பூர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் படி  தெரியவருவதாவது,

சம்பூர் பிரதேசம், தங்கபுரத்தை பிறப்பிடமாகவும் சந்தனவெட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட 31 வயதுடைய சந்தேக நபர் நேற்று தனது மனைவியுடன் முரண்பட்டு விட்டு, வீட்டை விட்டுச் சென்ற தாயை மாலை ஏழு மணியளவில் மனைவியின் வீட்டிற்கு அழைத்துவரும் போது பீடி கேட்டு தாயிடம் சண்டையிட்டுள்ளார்.

தாய் பீடி கொடுக்க மறுத்ததையடுத்து  மதுபோதையிலிருந்த குறித்த நபர் தமது தாயை சந்தனவெட்டை பகுதியில் வைத்து கல்லால் அடித்து கொன்றுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட 51 வயதான குறித்த தாய் போலியோ நோய்த்தாக்கத்திற்குஉள்ளானவர் எனவும்  யாசகம் செய்துவருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைசெய்யப்பட்டவரின் சடலம் தற்போது மூதூர் தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலை குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

தாயை கொலைசெய்த மகன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38