பல அமெரிக்கர்களிற்கு இந்த வாரம் மிகவும் கடினமானதாகவும் சோகமானதாகவும் காணப்படும் என அமெரிக்காவின் பொது சுகாதார தலைவர் surgeon general வைஸ் அட்மிரல் ஜெரோம் அடம்ஸ் பொக்ஸ் நியுசிற்கு இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மிகவும் நெருக்கடியான காலத்தினை அமெரிக்காவின் பேர்ள் ஹாபர் தருணம், எனவும் செப்டம்பர் 11 தருணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரமே அமெரிக்கர்களின் உயிர்களிற்கான மிகவும் கடினமான துயரமான வாரமாக அமையப்போகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது அமெரிக்கா முழுவதும் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்கா அதனை புரிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
வீடுகளிறகுள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு இன்னமும் உத்தரவிடாத ஆளுநர்களிற்கு அவர் செய்தியொன்றை விடுத்துள்ளார்.
ஒரு வாரத்திற்காவது வீட்டிற்குள் மக்கள் இருப்பதற்காக ஏதாவது செய்யுங்கள் என ஆளுநர்களை கேட்டுக்கொண்டுள்ள அவர் அடுத்த ஏழு நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை தொடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM