மட்டக்களப்பு, காத்தான்குடி ஸலாமத் ஜும் ஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள ஸலாமத் ஜும் ஆ பள்ளிவாசலின் கட்டிட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஒன்றே இவ்வாறு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதுடன் அந்த பள்ளிவாசலிலிருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் மூடப்பட்டிருந்த நிலையிலேயே இத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM