குருணாகலை போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலின் காரணமாக வைத்தியசாலையின் ஒளடதகளஞ்சியசாலை தீக்கிரையாகியுள்ளது.
குருணாகலை போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் ஒளடத களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக குருணாகலைபொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து குருணாகலை நகரசபையின் தீயணைப்பு படை, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்தி தீ பரவலின் போது களஞ்சியசாலையின் கீழ் மாடி மற்றும் முதல் மாடியும் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த மருந்துகள் சிலவும் சேதமடைந்துள்ளன.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குருணாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM