(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 54 இலட்சம் குடும்பங்களில் 26 இலட்சம் குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. மிகுதி 28 இலட்ச குடும்பங்களுக்கு எதிர்வரும் வாரம் நிவாரணம் வழங்கப்படும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது ஆலோசனையின் பிரகாரம் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஊடாக நிவாரணம் வழங்கப்படுகின்றன.
16 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களுக்கு இதுவரையில் 10 இலட்சத்து 7,650 ரூபா பெறுமதியான நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜெனரல் பந்துல திலகசிறி தெரிவித்தார்.
16,இலட்சம் சமுர்த்தி பயனாளர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மிகுதி 5000 ஆயிரம் ரூபா எதிர்வரும் வாரம் வழங்கப்படும்.
நாடு தழுவிய ரீதியாக உள்ள 1,073 சமுர்த்தி வங்கிகளில் 25,000 ஆயிரம் ஊழியர்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM