பெல்ஜியத்தின் பிரஸல்ஸ் நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் வெடிபொருட்களைக் கொண்ட பட்டியை அணிந்திருப்பதாக நபரொருவர் செவ்வாய்க்கிழமை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தை பொலிஸாரும் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரும் முற்றுகையிட்டனர்.
அத்துடன் அந்த 'சிற்றி 2' விற்பனை நிலையத்தை சூழ்ந்துள்ள வீதிகள் மூடப்பட்டன.
தொடர்ந்து அந்நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். எனினும் அவரிடம் வெடிபொருட்கள் எதுவும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அந்நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தையடுத்து அந்நாட்டுப் பிரதமர் சார்ள்ஸ் மைக்கேல் தெரிவிக்கையில், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.
பெல்ஜயத்தில் தீவிரவாத எச்சரிக்கை மூன்றாம் நிலையிலுள்ளது. இது ஆகக் கூடிய எச்சரிக்கை நிலையான நான்காம் நிலையிலிருந்து ஒரு நிலை குறைவாகும்.
கடந்த மார்ச் மாதம் பிரஸல்ஸ் நகரிலுள்ள சுரங்கப் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 32 பேர் பலியாகியிருந்தனர். அந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM