அமெரிக்காவில் கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்றால் நேற்று மாத்திரம் ஆயிரத்து 321 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 32 ஆயிரத்து 284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை அமெரிக்காவில் 277,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 ஆயிரத்து 392 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகள் மற்றும் பிராந்திங்களுக்கு பரவியுள்ளது.
ஆனால் சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அங்கு 31பேர் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதேவேளை, இதுவரை சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 322 பேர் இறந்துள்ளனர், ஆனால் சீனாவில் நேற்று மாத்திரம் 4 மாத்திரம் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரை உலகளாவிய ரீதியில் இதுவரை 59 ஆயிரத்து 141 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் இந்த கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு 1,098,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பாவை தொடர்ந்து தற்போது அமெரிக்காவை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த நாட்காளாக இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளையடுத்து அமெரிக்காவில் இந்த கொவிட் 19 நோய்த் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தரவுகள் ஊடாக அறிய முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM