டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது 78 வயதில் உயிரிழந்த அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2 ஆவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும்.
சிக்கலான இந்த வெற்றி இலக்கு கணக்கீட்டு முறையை கணிதவியல் நிபுணர்கள் பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள்.
1997 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை 1999 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் கணிதவியலாளர் ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவரால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM