உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் : மட்டக்குளி, கொத்தெட்டுவையில் இருவர் அதிரடி கைது ; மேலும் பலரை கைதுசெய்ய நடவடிக்கை

Published By: Digital Desk 3

02 Apr, 2020 | 09:55 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில்  பிரதான குற்றவியல் விசாரணைகளில் கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரிகளுக்கு குண்டினை எடுத்துச் செல்லவும், குறித்த இடத்தை அடையவும் உதவி செய்து நெறிப்படுத்தியதாக கூறப்படும் இருவர் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில்   காலி வீதி, கல்கிசை எனும் முகவரில் வசித்த பிரதான சந்தேக நபர்  ஒருவர்  இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வைத்தும் கொத்தட்டுவ பகுதியில் வைத்தும் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த மார்ச் 29 ஆம் திகதி, சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் வழி நடாத்தலில் செயற்பட்ட குழு,  மட்டக்களப்பு சியோன் தேவாலயம்  மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரை அங்கு அழைத்துச் சென்று, அவரை வழி நடாத்தியுள்ளமை  தொடர்பில் கல்கிசை பகுதியில் ஒருவரைக் கைது செய்தது. 

அவரிடம்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் முக்கிய தகவல்கள் சில வெளிப்படுத்தப்பட்டுளன.

அதன் பிரகாரமே சினமன் கிராண்ட்  ஹோட்டல் மீது தககுதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியை நெறிப்படுத்தியவரை கொத்தட்டுவையில் வைத்தும்,  கொச்சிக்கடை தேவாலயம் மீதான தாக்குதல்தாரியை அங்கு அழைத்துச் சென்ற நெறிப்படுத்தியமை தொடர்பிலான நபரை மட்டக்குளியில் வைத்தும்  சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். 

அவர்கள் இருவரிடமும் தற்சமயம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக  பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை கண்டறியப்படாத பல்வேறு மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளதாகவும்,  அதன்படி அடுத்து வரும் நாட்களில் பல எதிர்பாராத சந்தேக நபர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின. கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கட்­டு­வா­பிட்டி - புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­காகிய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இதனைவிட  கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய மூன்று ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி  காலை 8.45 மணிக்கும்  9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந்நிலை­யில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக  உள்ள ' நியூ ட்ரொபிகல் இன்' எனும்  சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம்  பதி­வா­னது. அதனைத் தொடர்ந்து பிற்­பகல்  2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரிகளை இலக்கு வைத்து  தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால்  தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 278 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

இந் நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில்  சி.ஐ.டி.இன்  12 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும்   விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55